இலங்கையரை கொலை செய்த இங்கிலாந்து சிறுவனுக்கு 3 வருட சிறை!
Read Time:1 Minute, 7 Second
இங்கிலாந்தின் நோர்த்பீல்ட்ஸ் – லெய்ஸெஸ்டர் பகுதியில் 41 வயதான பொன்னுதுரை நிமலராஜ் என்ற இலங்கை பிரஜையை கொலை செய்த குற்றத்திற்காக சிறுவன் ஒருவர் மூன்று வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 15 வயதான குறித்த சிறுவன் கடந்த வருடம் நவம்பர் மாதம் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் நேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வயது, தோற்றம் என்பவற்றால் குற்றவாளியை இனங்காண முடியாத நிலை காணப்பட்டபோதும், 15 வயது சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் அவர் மூன்று வருடங்கள் சிறையில் அடைக்கப்படுகிறார். கடந்த வருடம் ஜூன் மாதத்தில் பொன்னுதுரை நிமலராஜ் கொலை செய்யப்பட்டார்.
Average Rating