பம்பலப்பிட்டி கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு
Read Time:40 Second
கொழும்பு, பம்பலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரணம் குறித்து பம்பலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating