மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஸ்பாட் பாய்!

Read Time:1 Minute, 50 Second

rape-001மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடிய இளம்பெண்ணை ஸ்பாட் பாய் ஒருவர் கற்பழித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். அப்படி வாய்ப்பு தேடியபோது அவர் கொரேகாவ்ன் மோதிலால் நகரில் உள்ள ஸ்டுடியோ வெளியே முஸ்தபா மசூத் அலி கான்(23) என்பவரை சந்தித்துள்ளார்.

ஸ்பாட் பாயான முஸ்தபா அந்த பெண்ணிடம் தன்னை ஒரு பைனான்ஷியர் என்று அறிமுகம் செய்து கொண்டார். இதை நம்பிய அப்பெண் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருமாறும், சம்பளமாக ரூ.50,000 வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு முஸ்தபா உன்னை பெரிய நிறுவனத்தின் படத்திலேயே நடிக்க வைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 16ம் தேதி அப்பெண் முஸ்தபா மீது போலீசில் புகார் கொடுத்தார். அவர் தனது மனுவில், படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி முஸ்தபா தன்னை 5 முறை கற்பழித்ததாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முஸ்தபாவை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா
Next post இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (01.03.2013)