‘மோதலின் சூன்ய வலயம்’; திரையிடுவதை தடுக்க பேரவை மறுப்பு
Read Time:1 Minute, 26 Second
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் சனல்-4 ‘மோதலின் சூன்ய வலயம்’ இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஒளிநாடாவை திரையிடவதனை தடுக்குமாறு இலங்கையினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை நிராகரித்துள்ளது.
இந்த ஒளிநாடா மனித உரிமை பேரவையில் நாளை வெள்ளிக்கிழமை திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை இலங்கை இவ்வாறான கோரிக்கையொன்றை முன்வைத்தது.
இந்த ஒளிநாடா திரையிடப்படுவதற்கு பதிலளிக்கும் வகையில ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கடந்த திங்கட்கிழமை எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபை தூதர் ரெமிகியூஸ் ஹென்சேஷல் இது பேரவையின் உத்தியோகபூர்வமான நிகழ்வுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Average Rating