காத்தான்குடியில் பாம்போடு நடனமாடி அசத்தும் நபர்
உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் என்பவர் பாம்போடு பாம்பாக நடனமாடி அசத்திய நிகழ்வூ இன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. பொல்காவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின்(வயது 16) முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்காக மேற்படி மாபெரும் நிகழ்வூ இடம்பெற்றுள்ளது. உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர்இ ‘சமாதானம் என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன” என்ற அடிப்படையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வூ ஒழுங்கமைக்கப்பட்ருந்தது. இந்நிகழ்வில் விஷப் பாம்புகளுடன் விபரீதமாக விளையாடும் காட்சிஇ 10அடி நீளம்கொண்ட 20அடி எடை கொண்ட மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி நடனமாடுதல், தீப்பந்தங்களினால் உடம்பை சுட்டெறித்துக் கொண்டு நடனமாடும் நிகழ்வூஇ 4அடி டியூப் லைட்டை கரும்பு போல் கடித்து விழுங்கும் காட்சி, உள்ளிட்ட மாயாஜால நிகழ்வூகளும் நிகழ்த்தப்பட்டன.
Average Rating