களனி விகாரைக்கு அருகில் முத்தமிட்ட ஜோடிக்கு அபராதம்
Read Time:1 Minute, 19 Second
கொழும்பு, களனி விகாரை அமைந்துள்ள புனிதப் பிரதேசத்தில் மக்கள் நடமாட்டத்துக்கு மத்தியில் கட்டியணைத்து முத்தமிட்ட காதல் ஜோடிக்கு மஹர மாஜிஸ்திரேட் நீதவான் மாப்பா பண்டார தலா நூறு ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். களனி பொலிஸார் இக்காதல் ஜோடியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். களனி புனித பிரதேசத்தில் மக்கள் நடமாடுமிடத்தில் ஆபாசமான முறையில் கட்டியணைத்து முத்தமிட்டதாக பொலிஸார் காதல்ஜோடியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது தெரிவித்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்துகொள்ளவூள்ளதாகவூம் களனி விகாரைக்குள் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லையென்றும் சந்தேகநபர்கள் சார்பாக வாதாடிய சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இதையடுத்தே நீதவான் தலா 100 ரூபாஅபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
Average Rating