அரிவாளுடன் வந்த நோயாளி கைது
தலையணைக்குள் அரிவாளை மறைத்து வைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்த நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பொல்கஸ்வோவிட்ட பகுதியிலுள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பொல்கஸ்வோவிட்ட வேத்தர வைத்தியசாலைக்கே குறித்த நபர் இன்று வருகைதந்துள்ளார். தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த நோயாளி வைத்தியர் மற்றும் வைத்தியசாலையின் பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கும் அவர் முயற்சித்துள்ளார். அதன்போது அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்துக் கொண்டனர். எனினும், அவரிடமிருந்து தப்பித்து ஓடியபோது வைத்தியர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தான் ஒரு நோயாளி என்றும் தன்னை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் கூறிக்கொண்டே வந்த ஒருவர் தான் கொண்டுவந்திருந்த தலையணையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாக்குதல் நடத்த முட்பட்டதாகவும் அந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating