மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு வலியூறுத்தல்
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவூம்இ பிரித்தானியாவூம்இ ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வலியூறுத்தியூள்ளன. நேற்று நடைபெற்ற இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வூ அறிக்கை மீதான விவாதத்தின்போதேஇ இவ்வாறு வலியூறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, சீனா, ரஸ்யா, ஓமான், பாகிஸ்தான், வெனிசுலா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் இலங்கைவூக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. இலங்கைவின் மனிதஉரிமைகள் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவூம், அனைத்துலக சமூகம் இலங்கைவூக்கு மேலும் கால அவகாசத்தையூம் இடைவெளியையூம் கொடுக்க வேண்டும் என்றும் இந்நாடுகள் வலியூறுத்தியூள்ளன. இந்த விவாதத்தில் பேசிய இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க, பூகோள கால மீளாய்வூ அறிக்கையின் போது முன்வைக்கப்பட்ட 204 பரிந்துரைகளில்இ 91 பரிந்துரைகளை தமது நாடு நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 110 பரிந்துரைகளை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவூம், 3 பரிந்துரைகள் குறித்து மேலதிக ஆய்வூகள் மேற்கொள்ளப்படுவதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 30 ஆண்டுகால போரிலிருந்து விடுபட்டுள்ள இலங்கைவூக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியூறுத்திக் கூறியூள்ளார். இந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலையைச் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
Average Rating