யாழ் 15 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர் தலைமறைவு
Read Time:1 Minute, 2 Second
யாழ் வட்டுகோட்டைப் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக முறைப்பாடு ஒன்று கடந்த புதன்கிழமை பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருணரட்ன தெரிவித்துள்ளார். வலி. மேற்குப் பகுதியில் கடமையாற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர் ஒருவரினாலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் தலைமறைவாகியிருப்பதன் காரணமாக அவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Average Rating