துமிந்த சில்வாவின் மூன்று பாதுகாவலர்கள் பிணையில் விடுவிப்பு
Read Time:1 Minute, 7 Second
பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூன்று பாதுகாவலர்கள் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் தலா 50 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 5இலட்சம் பெறுமதியான சரீர பிணையிலும் விடுக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்கள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகிறார். பாரத லக்ஷ்மன் கொலையுண்ட போது காயமடைந்ததாக கூறப்படும் துமிந்த சில்வா, தற்போது இலங்கை திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating