ரிஎம்விபி கட்சிக்குள் மோதல்..
Read Time:1 Minute, 4 Second
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்கிற எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை கட்சியின் முன்னாள் செயலர் எ.கைலேஸ்வரராஜா மற்றும் கட்சியின் உறுப்பினர் எம்.வரதராஜன் ஆகியோரும் ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. அதிகார துஸ்பிரயோகம் மற்றும் யாப்பு விதிகளை மீறியமையே இதற்கு காரணமென கூறப்படுகிறது.
Average Rating