பி.பி.சி இலங்கை ஒலிபரப்பு இடைநிறுத்தம்
பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவைமூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச்முதல் பிபிசி இடைநிறுத்திக்கொண்டுள்ளதாக பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீற்றர் ஹோரக்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து நடந்ததை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எமது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுவரும் நேயர்களுக்கு இந்த சேவை தரப்படுவதில் ஏற்பட்டிருக்கும் இத்தடை குறித்து நாங்கள் வருந்துகிறோம். ஆனால் எங்களது நிகழ்ச்சிகளை குறிவைத்து இதுபோன்ற இடைஞ்சல்கள் நடப்பது, அந்த நேயர்கள் எங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாரிய அளவில் மீறுவதான ஒரு செயல். இதை பிபிசி அனுமதிக்கமுடியாது என பீற்றர் ஹோரக்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating