கொழும்பு நகரினுள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவல்
Read Time:1 Minute, 1 Second
திருமலை சம்பூரிலிருந்து கொழும்பு நகருக்குள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவியுள்ளதாக சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த இரு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளனர் எனவும் தற்கொலைத் தாக்குதலாளிகளில் 4 பெண்களும் 4 ஆண்களும் உள்ளடங்கப்பட்டுள்ளனர் என சிறீலங்கா புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலாளிகள் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததுடன் கொழும்பில் முக்கிய இலக்குகளைத் தாக்கியழிக்க திட்டமிட்டுள்ளனர் எனவும் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வுத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.