13 வயது சிறுமியின் வாழ்க்கையை கூறுபோட்ட அக்காவின் கணவன்: வவுனியாவில் சம்பவம்!!

Read Time:2 Minute, 15 Second

04c8a109-97f3-4b18-a5a1-46f2fa030086_S_secvpfவவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவி அவரது மைத்துனரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி யோ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி, அவருடைய சகோதரியின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (28) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சிறுமி பல நாட்களாக பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையிலும் சிறுமியை பாதுகாக்கவோ, அவருக்கு உதவவோ எவரும் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமி அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரிடம் சிறுமி நேற்று (28) முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இத்தகவல் எமக்கு அக் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தால் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமக்கு அக் கிராமத்திற்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக யோ.ஜெயக்கெனடி குறிப்பிட்டார்.

இதன் பின்னர் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி தலைமையில் பெண்கள் பிரிவு பொலிஸாரும் சாந்தசோலை கிராமத்திற்கு சென்று கைது செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரி முதல்வர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு!!
Next post போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியதால் மூன்று ஆடுகள் கைது!!