போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியதால் மூன்று ஆடுகள் கைது!!

Read Time:1 Minute, 41 Second

gout_arrestபோலீஸ் ரோந்து வாகனத்தை சேதப்படுத்திய, மூன்று ஆடுகளை பிடித்து, கால்நடை துயர் தடுப்பு கழகத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர், கணேஷ் பாபு. கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், ரோந்து வாகன ஓட்டுனராக உள்ளார்.

இவர், போலீசிற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள, இன்னோவா ரோந்து வாகனத்தை (டி.என்.01 ஜி 5671), குடியிருப்பில் விட்டு விட்டு, வீட்டிற்கு செல்வார்.

கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆரோக்கிய நாதன் என்பவர் மனைவி மேரி, 37, என்பவர், வளர்த்து வரும் மூன்று ஆடுகள், அடிக்கடி இந்த குடியிருப்பிற்குள் நுழைந்து, வாகனங்களில் ஏறி ஆட்டம் போடுவது வழக்கம்.

போலீசின் புதிய வாகனத்திலும், ஆடுகள் ஏறியதில், வாகனத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் போலீசில், கணேஷ் பாபு, புகார் அளித்தார்.

புகாரை அடுத்து, நேற்று காலை மேய வந்த, மூன்று ஆடுகளும், பிடிக்கப்பட்டு (கைது!), வேப்பேரியில், உள்ள கால்நடை துயர் தடுப்பு கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது சிறுமியின் வாழ்க்கையை கூறுபோட்ட அக்காவின் கணவன்: வவுனியாவில் சம்பவம்!!
Next post கவர்ச்சி போஸ்களில் வாழைப்பழத்திற்கும் முக்கிய பங்குண்டு !!(PHOTOS)