அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஈரானுக்கு உரிமை உண்டு : ரஷிய அதிபர்
Read Time:1 Minute, 3 Second
அணுசக்தி தொழில்நுட்பத்தை வைத்திருக்க ஈரானுக்கு உரிமை உண்டு என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஷாங்காயில் வியாழக்கிழமை கூறினார். ஷாங்காயில், தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள புதின் அங்கு சென்றிருந்தார். அப்போது ஈரானியத் தலைவர் மஹ்மூத் அகமதிநெஜாத்தை புதின் சந்தித்தார்.
அப்போது புதின் கூறியதாவது: ஈரான் உள்பட அனைத்து நாடுகளுக்குமே அணுசக்தி உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உரிமை உண்டு. ஆனால், சர்வதேச சமுதாயத்துக்கு எவ்வித சந்தேகமும், அச்சுறுத்தலும் இல்லாதபடி இந்நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.