காரைநகரில் சிவாஜிலிங்கம் ராணுவத்தால் தடுத்து வைப்பு
Read Time:1 Minute, 12 Second
தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவா ஜிலிங்கம் காரைநகரில் இரு மணி நேரம் ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காகக் காரைநகருக்கு நேற்று மாலை சென்றுள்ளார்.
இதன்போது காரைநகர் வலந்தலைச் சந்தியில் அவரது வாகனத்தை மறித்த இராணுவத்தினர், சுவரொட்டிகளை ஓட்டுவதாகக் குற்றம் சாட்டி அவரை தடுத்து வைத்திருந்தனர்
சுமார் இரண்டு மணி நேரம் இராணுவக்காவலில் வைக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கம் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Average Rating