வவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி! -ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம்
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு கட்சிகளிலும் சுயேட்சை குழுக்களிலும் 9 பேர் வீதம் போட்டியிடுகின்றனர்.
இதில் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனங்களும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு இரண்டு ஆசனங்களும் என பேசப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் அந்த நான்கு பேர் என்பதில் பெரும்பாலும் மூன்று பேரின் உடைய பெயர்கள் (முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் இ.இந்திரராஜா, முன்னாள் வவுனியா நகரபிதா ரி.லிங்கநாதன், வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்) வவுனியா மக்களால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,
நான்காவது ஆசனத்தை விருப்பு வாக்கு அடிப்படையில் யார் பெறப்போவது என்பதில் கடுமையான போட்டி நிலவுகின்றது.
இதனால் சில வேட்பாளர்கள் ஏனைய சக வேட்பாளர்களுக்கு எதிராக மக்களிடையே பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகின்றது என ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Average Rating