9 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு

Read Time:2 Minute, 8 Second

2469_santh9 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு: தபால் சேவைகள் பிரதி அமைச்சராக சனத் ஜயசூர்ய-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடிவீரரும் தற்போதைய இலங்கை கிரிக்கெட் பிரதம தேர்வாளருமான பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூர்யவுக்கு தபால் சேவைகள் பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பிரதி அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போதே சனத் ஜயசூர்யவும் தபால் சேவைகள் பிரதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

புதிதாக பிரதி அமைச்சர்களாக பதவியேற்றவர்களின் விபரம் :

01. சனத் ஜயசூரிய – தபால் சேவைகள் பிரதி அமைச்சர்
02.. லக்ஷமன் வஸந்த பெரேரா – தொழில் மற்றும் வணிக பிரதி அமைச்சர்
03. சரத் வீரசேகர – தொழில் மற்றும் தொழில் தொடர்பு பிரதி அமைச்சர்
04. வை.ஜி. பத்மசிறி – விவசாயத்துறை பிரதி அமைச்சர்
05. அன்டனி விக்டர் பெரேரா – தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சர்
06. ஹேமால் குணசேகர – நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர்
07. மொஹான் லால் கிரேரோ – பிரதிக் கல்வி அமைச்சர்
08. நிஷாந்த முத்துஹெட்டிகம – சிறு பயிர் ஏற்றுமதி அபிவிருத்தி
09. சரத் முத்துகுமாரன – புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்து மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபருக்கு விளக்கமறியல்..
Next post படுகவர்ச்சியில் சோனம் கபூர்!!