கார் விபத்தில் இருவர் படுகாயம்!
Read Time:1 Minute, 1 Second
கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று அப்புத்தளை விஹாரகல ஐந்தாம் மைல் கல்லில் செவ்வாய்க்கிழமை காலை விபத்துக்குள்ளானது.
சாரதியுடன் சட்டத்தரணியொருவர் பயணித்த இவ்வாகனம் சுமார் 13 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்தது. விஹாரகல பிரதேச மக்களால் மீட்கப்பட்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். சாரதி கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.
இவ்விபத்து தொடர்பாக அப்புத்தளை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு சார்ஜன்ட் டபிள்யூ ஏ. திலகசிறி தலைமையிலான குழுவினர் விசாரணை செய்துவருகின்றனர்.
Average Rating