கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!

Read Time:1 Minute, 10 Second

knife.bloodயாழ்.கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இழக்கான நபர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு முன்னால் இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த எஸ்.யோகராஜா என்பவரே காயமடைந்துள்ளார்.

யாழ். பலாலி வீதி, கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வாளினால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எட்டுவயது சிறுமியை வல்லுறவு செய்த நபர்
Next post நாட்­டுக்குள் இரு அர­சுகளை உரு­வாக்­கவே சர்­வ­தேசம் முயல்­கி­றது: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்!