கள்ளக் காதலனை அசிட் வீசி கொலை செய்த பெண் கைது!

Read Time:2 Minute, 32 Second

arrest.woman25 வயது திரு­ம­ண­மா­காத இளை­ஞ­னுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாகக் கூறப்­படும் 30 வய­தான இரு பிள்­ளை­களின் தாயொ­ரு­வர் தனது கள்ளக் காதலன் மீது அசிட் வீசி கொலை செய்த குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டுள் ளார்.

அசிட் வீசுவ­தற்கு உடந்­தை­யாக இருந்த கண­வ­னையும் கண­வனின் தந்­தை­யையும் கைது செய்த வலப்­பனை பொலிஸார் மூவ­ரையும் வலப்­பனை மாவட்ட நீதி­பதி திரு­மதி குமாரி ஜய­வர்­தன முன்­னி­லையில் ஆஜர் செய்­த­போது சந்­தேக நபர்கள் மூவ­ரையும் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்டார்.

சம்­ப­வத்தில் வலப்­பனையை சேர்ந்­த­வரே கொல்­லப்­பட்­ட­வ­ராவார். இப்­பி­ர­தே­சத்தில் வர்த்­தக நிலை­ய­மொன்றை நடத்தி வந்த காலஞ்­சென்ற இளைஞர் அதே பிர­தே­சத்தைச் சேர்ந்த இரு பிள்­ளை­களின் தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்­திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒருநாள் இப் பெண்ணின் வீட்டில் இவர்கள் இருந்­தபோது கண­வ­னிடம் சிக்­கி­யுள்­ளனர்.

கள்ளத் தொடர்பை கைவி­டும்­படி கண வன் மனை­வியை கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்ளார். இருந்தும் இவர்கள் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான தொடர்பு நீடித்து வரு­வதை அறிந்து கொண்ட கணவன், மாவ­னல்லை பிர­தே­சத்­தி­லி­ருந்து அசிட்டை வாங்கி வந்து மறைத்து வைத்­துள்ளார். சம்­பவ தினம் காதலன் மீது அசிட் வீசப்­பட்­டதை அடுத்து அவர் வலப்­பனை வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டு பின்னர் நுவ­ரெ­லியா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு அங்கு இறந்­துள்ளார்.

அசிட் வீசி­ய­தாகக் கூறப்படும் பெண்ணும் அவரது கணவர் மற்றும் கணவனின் தந்தை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிராண்ன்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு
Next post சனல் – 4 ஊடகவியலாளர்கள் வவுனியா பயணித்த, ரயிலை மறித்துப் போராட்டம்