நால்வரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 11 வயது மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிப்பு!
இரு தாத்தாக்கள் மற்றும் 23 வயது நபர் உட்பட பாடசாலை மாணவரொருவராலும் சுமார் இரண்டு வருட காலம் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 11 வயது மாணவியையும் ஐந்தாம் ஆண்டு மாணவரொருவரையும் கலஹா பொலிஸார் வைத்திய பரிசோத னைக்காக கலஹா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
கம்பளை கல்வி வலயத்தைச் சேர்ந்த மஸ்கொல்ல பிரதேசத்திலுள்ள பின்தங்கிய பாடசாலையொன்றின் மாணவ ஆலோசனை சேவைக்குப் பொறுப்பான ஆசிரியரின் கவனத்துக்குட்பட்ட இந்த மாணவியை விசாரணை செய்தபோது இந்த பாலியல் கொடூரங்கள் தெரியவந்துள்ளது.
உடனடியாக இது தொடர்பாக சிறுவனதும் சிறுமியனதும் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட இது தொடர்பாக விசாரணை நடத்திய பின்னர் கலஹா பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி சிறுமியின் தாத்தாக்கள் இருவரும் நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாகவும் ஆரம்பத்தில் இவர்கள் இந்த மாணவிக்கு 50 ரூபாவை கொடுத்து இனங்கச் செய்துள்ளனர்.
இதற்கிடையில் மாணவி பாடசாலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 23 வயது நபரொருவர் மாணவியை பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச் சென்று நாளாந்தம் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
இந்த மாணவியுடன் பாடசாலை முடிந்து ஒன்றாக வீடு திரும்பும் சிறுவனையும் இந்த இளைஞன் பாலியல இம்சைக்குட்படுத்தியது மட்டுமின்றி இந்த மாணவனை, மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும்படி அச்சுறுத்தி அதை வீடியோ செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் மாணவனுக்கும் மாணவிக்கும் பாலியல் இச்சையைத் தூண்டும் வீடியோக்களைக் காட்டி இந்த இளைஞர் அவர்களை தூண்டியுள்ளதாவும் தெரியவந்துள்ளது. கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating