நால்­வரால் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட 11 வயது மாண­வி மருத்­துவ பரி­சோ­த­னைக்கு அனு­மதிப்பு!

Read Time:3 Minute, 10 Second

rape.group_rapeஇரு தாத்தாக்கள் மற்றும் 23 வயது நபர் உட்­பட பாட­சாலை மாண­வ­ரொ­ரு­வ­ராலும் சுமார் இரண்டு வருட காலம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்டு இம்­முறை 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற்­றிய 11 வயது மாண­வி­யையும் ஐந்தாம் ஆண்டு மாண­வ­ரொ­ரு­வ­ரையும் கலஹா பொலிஸார் வைத்­திய பரி­சோ­த­ னைக்­காக கலஹா வைத்­தி­ய­சா­லையில் சேர்த்­துள்­ளனர்.

கம்­பளை கல்வி வல­யத்தைச் சேர்ந்த மஸ்­கொல்ல பிர­தே­சத்­தி­லுள்ள பின்­தங்­கிய பாட­சா­லை­யொன்றின் மாணவ ஆலோ­சனை சேவைக்குப் பொறுப்­பான ஆசி­ரி­யரின் கவ­னத்­துக்­குட்­பட்ட இந்த மாண­வியை விசா­ரணை செய்­த­போது இந்த பாலியல் கொடூ­ரங்கள் தெரி­ய­வந்­துள்­ளது.

உட­ன­டி­யாக இது தொடர்­பாக சிறு­வ­னதும் சிறு­மி­ய­னதும் பெற்­றோ­ருக்கு அறி­விக்­கப்­பட்ட இது தொடர்­பாக விசா­ரணை நடத்­திய பின்னர் கலஹா பொலிஸ் நிலை­யத்தில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணை­க­ளின்­படி சிறு­மியின் தாத்­தாக்கள் இரு­வரும் நீண்ட கால­மாக சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி வந்­துள்­ள­தா­கவும் ஆரம்­பத்தில் இவர்கள் இந்த மாண­விக்கு 50 ரூபாவை கொடுத்து இனங்கச் செய்­துள்­ளனர்.

இதற்­கி­டையில் மாணவி பாட­சா­லையில் அதே கிரா­மத்தைச் சேர்ந்த 23 வயது நப­ரொ­ருவர் மாண­வியை பாழ­டைந்த வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று நாளாந்தம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி வந்­த­தா­கவும் மாணவி தெரி­வித்­துள்ளார்.

இந்த மாண­வி­யுடன் பாட­சாலை முடிந்து ஒன்­றாக வீடு திரும்பும் சிறு­வ­னையும் இந்த இளைஞன் பாலி­யல இம்­சைக்­குட்­ப­டுத்­தி­யது மட்­டு­மின்றி இந்த மாண­வனை, மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யும்­படி அச்­சு­றுத்தி அதை வீடியோ செய்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்கு முன்னர் மாணவனுக்கும் மாணவிக்கும் பாலியல் இச்சையைத் தூண்டும் வீடியோக்களைக் காட்டி இந்த இளைஞர் அவர்களை தூண்டியுள்ளதாவும் தெரியவந்துள்ளது. கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சனல் – 4 ஊடகவியலாளர்கள் வவுனியா பயணித்த, ரயிலை மறித்துப் போராட்டம்
Next post ஐ.நா மனித உரிமை சபைக்கு பிரித்தானியா, ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் தெரிவு!!