பண்டாரநாயக்க மண்டப தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணம்
Read Time:1 Minute, 2 Second
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கண்காட்சி கூடத்திலேயே இன்றுகாலை தீ ஏற்பட்டிருந்தது.
இத்தீ விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
அத்துடன், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகள் வழமைபோன்று இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
Average Rating