பொலிஸ் – மக்கள் மோதலை தொடர்ந்து இருவர் கைது
Read Time:1 Minute, 16 Second
மொரட்டுவ – அங்குலானை பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை அங்குலானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.
எனினும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் குழுக்கள் பல சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன.
இந்நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தைச் சேர்ந்த பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் அங்குலானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating