போர்த்துக்கல் லிஸ்பென் கடலில் வீழ்ந்து இலங்கையர் மாயம்..!
Read Time:47 Second
போர்த்துக்கல் லிஸ்பென் கடலில், இலங்கை கொடியை தாங்கிச்சென்ற கப்பலிலிருந்து பணியாளர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நேரப்படி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அவரை கண்டுபிடித்து மீட்பதற்காக போர்த்துக்கல் ஹெலிகொப்டர்களும் கரையோர காவல் படையினரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் இந்நபர் மீட்கப்படவில்லை.
Average Rating