வட முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர்
Read Time:1 Minute, 15 Second
வட மாகாணத்தில் உள்ள அரச பணியாளர்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
தற்போது வட மாகாண சபை சிறந்த அதிகாரத்துடன் சிறப்பாக இயங்குகின்றது.
வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் அனைவரும், மாகாண சபையின் செயற்பாடுகள் சிறப்பாக முன் எடுக்கப்படுவதற்கும், மக்களின் நலனுக்காகவும் வட மாகாண சபையுடன் இணைந்து ஒத்துழைத்து நடக்க வேண்டும்.
இதற்காக, மாகாண முதலமைச்சர். மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இது மாகாண அரசாங்கத்திற்கு மாத்திரமின்றி தேசிய அரசியலுக்கும் நன்மையாக அமையும் என்று வட மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
Average Rating