டெல்லியில் போலந்து நாட்டுப் பெண்னை கடத்தி பலாத்காரம் செய்த சாரதி

Read Time:5 Minute, 10 Second

rape-010இந்தியாவின் டெல்லி அருகே போலந்து நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான டாக்சி சாரதியை பொலிசார் தேடி வருகின்றனர்.

போலந்து நாட்டைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார்.

‘‘ஹரே கிருஷ்ணா´´ இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆக்ரா – டெல்லி அருகே உள்ள மதுரா நகரில் தங்கி இருந்தார்.

திருமணமாகிவிட்ட அவருக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. மதுராவில் சிறிய துணிக்கடை ஒன்றை இவர் நடத்தி வருகின்றார்.

வெளிநாடுகளுக்கு துணி ஏற்றுமதியும் செய்து வருகிறார். இதற்காக அவர் அடிக்கடி மதுராவில் இருந்து டெல்லி சென்று வருவதுண்டு. நேற்று முன்தினம் மாலை அவர் தன் மகளுடன் டெல்லி செல்ல யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

பஸ் வராததால் வாடகை டாக்சிகளை நிறுத்தி அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரிய வெள்ளை நிற கார் அவர் அருகில் வந்து நின்றது. கார் சாரதி அவரிடம், ‘‘எங்கு செல்ல வேண்டும்?´´ என்று கேட்டார்.

அதற்கு அந்த பெண் ‘‘டெல்லிக்கு´´ என்று கூறினார். அடுத்த விநாடி கார் சாரதி, அந்த பெண்ணை காருக்குள் பிடித்து இழுத்தார். உதவி கோரி அந்த பெண் அலறினார். ஆனால் கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த வெளிநாட்டுப் பெண்ணை சாரதி கடத்திச் சென்றார்.

வழியில் அந்த பெண் கடும் கூச்சல் போடவே டாக்சி சாரதி பெரிய கத்தியை எடுத்து, குத்தி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் அமைதியாகி விட்டார்.

பிறகு திடீரென டாக்சி சாரதி ஒரு பாட்டிலில் இருந்த மயக்க மருந்தை எடுத்து வெளிநாட்டு பெண் முகம் மீது ‘ஸ்பிரே´ அடித்தார். இதனால் அந்த பெண்ணும், அவரது மகளும் மயக்கம் அடைந்தனர். இரவில் மதுரா – டெல்லி இடையில் உள்ள சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு, வெளிநாட்டு பெண்ணை டாக்சி சாரதி பாலியல் பலாத்காரம் செய்தார்.

வெளிநாட்டு பெண் மயங்கிய நிலையில் நடந்த பாலியல் பலாத்காரம் இரவு முழுக்க நீடித்துள்ளது. பிறகு சனிக்கிழமை அதிகாலை டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலைய வீதியோரம் வெளிநாட்டு பெண்ணையும், அவரது மகளையும் தள்ளி விட்டு விட்டு, டாக்சி சாரதி சென்று விட்டார்.

காலை 8 மணிக்கு பிறகே அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் அந்த பெண் டெல்லி பகர்கஞ்ச் பொலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.

பொலிசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை வைத்தியர்கள் உறுதி படுத்தினார்கள். அவர் உடலில் பல பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே 2 பேர் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பலாத்காரத்திற்குள்ளான பெண், டாக்சி சாரதியை நன்றாக பார்த்துள்ளார். ஆனால், கார் நம்பரை குறித்துக் கொள்ள தவறிவிட்டார்.

என்றாலும் வெள்ளை நிற கார் என்ற அடையாளத்தை மட்டும் கூறினார். எனவே, அந்த கார் டெல்லி – ஆக்ரா இடையே உள்ள டோல் கேட்டை கடந்த காமிரா காட்சியை ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் மூலம் அந்த டாக்சி சாரதி யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது.

பகர்கஞ்ச் பொலிசாரும், மதுரா பொலிசாரும் ஒருங்கிணைந்து அந்த டாக்சி சாரதியை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’
Next post (வீடியோ) நாம் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.. -ப.சிதம்பரம்