பந்தயத்துக்காக காதுகளை அறுத்துக் கொண்ட ரஷ்ய ‘குடிமகன்கள்’

Read Time:1 Minute, 39 Second

208dac-d2a5-464f-85ee-8c5172703006_S_secvpfரஷ்யாவில் குடிபோதையில் பந்தயம் கட்டி தோல்வியடைந்த இரண்டு பேர் தங்கள் காதுகளை அறுத்துக்கொண்டனர்.

ரஷ்யாவின் செர்பியன் கெமரோவோ பிராந்தியத்தில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, இரண்டு பேர் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் விளையாட்டாக ஒரு போட்டி வைக்க நினைத்தனர். அதன்படி மல்யுத்தப் போட்டி நடத்தி தோல்வியடையும் நபர் தனது காதை அறுத்துக் கொள்ள வேண்டும் என்று பந்தயம் கட்டினர்.

இந்த அபாயகரமான விதிமுறையை இருவரும் ஏற்றதையடுத்து, களத்தில் இறங்கினர். முதல் சுற்றில் ஒருவர் வெற்றி பெற்றார். ஆனால், தோல்வியடைந்த நபர் மீண்டும் ஒரு ரவுண்டு மோதலாம் என்று வலியுறுத்தி, அதில் வெற்றியும் பெற்று விட்டார். பின்னர் இருவரும் ஒவ்வொருமுறை தோல்வியடைந்ததால், போட்டி விதிமுறைப்படி தங்கள் இடது காதுகளை அறுத்துக்கொண்டனர்.

இதில் ஒருவரின் காது முழுவதும் துண்டானது. மற்றொருவரின் காது பாதி துண்டிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பான் இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு : ஐவர் பலி, 17 பேர் காயம்
Next post யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஆவாவின் காதலியா?