இலங்கை பெண்ணும், இரு குழந்தைகளும் லண்டனில் சடலங்களாக மீட்பு!
Read Time:1 Minute, 26 Second
லண்டனின் வடமேற்கு பகுதி வீடொன்றில் இருந்து இலங்கையை பிரஜையான ஜெயவாணி வாகேஸ்வரன் (வயது 33) அவருடைய எட்டு மாத ஆண் குழந்தை (நதிபன்), மற்றும் ஐந்து வயது சிறுவன் (அனோபன்) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டுத் தலைவர் சக்திவேல் வாகேஸ்வரன் 9 ஆம் திகதி வியாழக்கிழமை வீட்டுக்கு வந்தபோது மனைவி, பிள்ளைகள் சடலங்களாக இருந்ததை கண்டு அதுதொடர்பில பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளார். அதனையடுத்து பிரித்தானிய பொலிஸார் சடலங்கை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்ணின் இரு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் பெண் கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை என்றும் அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Average Rating