சீனாவில் போலீஸ்காரர் ஆன 9 வயது சிறுவன்
Read Time:1 Minute, 18 Second
சீனாவில் சினுயுசிட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷோயுஜுன்யி (9). இவன் ஒருவித மர்ம திசு நோயால் அவதிப்பட்டு வந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவன் தனது வாழ்நாளில் போலீஸ்காரர் ஆக வேண்டும் என விரும்பினான்.
தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். அதை அவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். அவனது ஆசையை நிறைவேற்ற தற்காலிகமாக கவுரவ போலீஸ் வேலை வழங்கினர். அதன்படி அவன் போலீஸ் உடை அணிந்து போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக பணிபுரிந்தான்.
அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர், 3 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து தப்பிக்க முயன்றனர். அதுபற்றிய தகவலை பணியில் இருந்த ஷோயு போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களை பிடிக்க உதவினான். அதற்காக சிறுவனை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
Average Rating