ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்; மீளாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

Read Time:2 Minute, 22 Second

homo-001ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய மத்திய அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுஆய்வு செய்யும் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பு தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு சமூக, மத அமைப்புகள் மனுக்களை தாக்கல் செய்தன.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377இன் படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளது என்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை மீளாய்வு செய்ய வேண்டும் எனக் கோரி இந்திய மத்திய அரசும், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான அமைப்புக்களும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தன.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஜே.முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

நீதிபதிகளின் அறையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில், மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது
Next post “பூலோகம்” – அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)