விலங்கு என நினைத்து 22 வயது மன்னார் இளைஞர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 21 Second

pistrol.Shootingமன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் பொலோகம வயல் பகுதியில் வைத்து ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

22 வயதுடைய தீபன் என்ற இளைஞரே நேற்று இரவு இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்துள்ள பொலிஸார் கட்டுத்துவக்கு ஒன்றையும் மீட்டுள்ளனர்.

நானாட்டான் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பயிர் நிலத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் விலங்கு ஒன்று வருவது போன்று உணர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அதன் பின்னரே வந்தவர் இளைஞர் என கண்டு கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞரை கடத்திச் சென்ற, பெண் பரிசோதகர் தொடர்பில் விசாரணை
Next post நயன்தாராவை ‘இது நம்ம ஆள்’ என்று சொல்லும் சிம்பு