நயன்தாராவை ‘இது நம்ம ஆள்’ என்று சொல்லும் சிம்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி ஆகியோர் நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என்று தலைப்பு வைக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதமே நடைபெற்று வந்த நிலையில் நயன்தாரா தான் கதாநாயகி என்று ட்விட்டரில் இயக்குனர் பாண்டிராஜ் அறிவித்ததை தொடர்ந்து அந்த திரைபடத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
சிம்பு – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.
சிம்பு காதலில் தோல்வி அடைந்த ஒருவர். அவருக்கு குடும்பத்தினர் பேசி முடித்த பெண் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்திற்கு ஆறு மாதங்களே உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்சினைகள். இது தான் படத்தின் கதை
இப்படத்தில் நயன்தாராவை கதாநாயகி ஆக்குவதற்கு முன்பு, ‘கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது ‘லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ்வு என தலைப்பு வைக்கலாமா என்று இயக்குனர் ஆலோசித்துள்ளார்.
எனினும் நயன்தாரா கதாநாயகி ஆனவுடன் தற்போது ‘இது நம்ம ஆளு’ என பெயரிடலாம் என அவர் முடிவு எடுத்திருக்கிறார்.
ஏனென்றால் படத்தில் நயன்ப்பிற்கு தாராவைப் பார்க்கும் போது எல்லாம் சிம்பு ‘இது நம்ம ஆளு சார்’ என்று கூறிக்கொண்டே இருப்பாராம். அது தான் தலைப்பிற்கான காரணமாம்.
Average Rating