நீர் எடுக்கச் சென்ற பெண், முதலைக்கு பலி
Read Time:48 Second
அம்பலாந்தொட்ட – கரககசார குளத்தின் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணொருவரை முதலை தாக்கியத்தில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணை முதலை நீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெற்று சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படுகிறது.
Average Rating