8 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் 53 வயதான நபர் பொலிஸாரால் கைது

Read Time:1 Minute, 37 Second

rape.child.abuseகல்முனை பெரிய நீலாவணை பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவர் 53 வயது முதியவரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.இச்சம்பவம் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

பெரிய நீலாவணையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வசித்துவரும் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்த தொடர் மாடி வீட்டுத் திட்டத்திலே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவதினம் குறித்த 8 வயது சிறுமி தனிமையில் விளையாடிக் கொண்டிருந்த போது இதனை அவதானித்த 53 வயது முதியவர் அச்சிறுமியை அழைத்து சாப்பாடு வாங்கித் தருவதாக கூட்டிச் சென்றே துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

முதியவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வேளையில் அயலவர்கள் சென்று முதியவரை நையப்புடைத்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் 53 வயது முதியவரை கைது செய்துள்ளனர். சிறுமி கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற் கொள்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர் எடுக்கச் சென்ற பெண், முதலைக்கு பலி
Next post இளைஞர் யுவதிகளுக்கு, ஆபாசப்படம் காண்பித்த பெண்ணொருவர் கைது