சிறிய படகில் சென்றவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட சுறா
Read Time:46 Second
சிறிய படகொன்றில் மீன்பிடிக்கச் சென்ற நீர்கொழும்பு மீனவர்களுக்கு 300 கிலோ கிராம் நிறை கொண்ட பெரிய சுறா மீன் ஒன்று நேற்று இரவு அகப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே இந்த சுறா மீனைப் பிடித்துள்ளனர்.
பொதுவாக சிறிய படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது போன்று பெரிய சுறா மீன்கள் பிடிபடுவது அரிதாகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating