தந்தை கொடுமைப்படுத்திய, 5 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

Read Time:3 Minute, 14 Second

002fஅமெரிக்காவில் 5 வயது சிறுவனை மாடிப்படிகளுக்கு கீழே உள்ள பகுதியில் அவனது தந்தை மற்றும் வளர்ப்பு தாய் ஆகியோர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் தந்தை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹாரீஸ் கவுண்டி பகுதியில் வசித்து வரும் தம்பதியர் பிராட்லி பிளெய்மியர் மற்றும் டம்மி பிளெய்மியர்.

டம்மிக்கு வயது 33. இவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த தம்பதியரில் தந்தை பிராட்லிக்கு பிறந்த 5 வயது சிறுவன் ஒருவன் உள்ளான். டம்மி வளர்ப்பு தாயாக இருந்துள்ளார். ஆனால், சிறுவனை கொடுமைப்படுத்துவதாக போலீசாருக்கு கடந்த பிப்ரவரி 20ந்தேதி அருகில் இருப்பவர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது சிறுவனின் வீட்டிற்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பினர் மற்றும் போலீசார் அது குறித்து விசாரித்து விட்டு சென்றனர்.

அப்பொழுது அவர்கள் அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு சென்றதால் அந்த வழக்கு கைவிடப்பட்டது. ஆனால், மீண்டும் கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து சிறுவனை விசாரிக்க வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அந்த சிறுவன், மிக குறைந்த எடையுடன் போதிய உணவு வழங்கப்படாமல், உடம்பில் காயங்களுடன் இருந்துள்ளான்.

வீட்டின் மாடிப்படி பகுதியின் கீழே உள்ள சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து வளர்ப்பு தாய் டம்மி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், 2 ஆயிரம் அமெரிக்க டாலர் ஜாமீன் தொகை அளித்து அவர் தண்டனையில் இருந்து தப்பினார். பிராட்லிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சிறுவன் அவனது உண்மையான தாயிடம் தற்பொழுது ஒப்படைக்கப்பட்டு உள்ளான். பாதுகாப்பு கருதி தாய் மற்றும் சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை. கடந்த 2 வருடங்களாக தாயை விட்டு பிரித்து வைக்கப்பட்ட சிறுவன் மீண்டும் தனது தாயுடன் சேர்ந்து விட்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் சினிமாவில் காமெடி செய்கிறேன் சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் : வடிவேலு
Next post நிலநடுக்கத்திற்கு நன்றி கூறி, தப்பி ஓட்டம் பிடித்த 300 பெண் கைதிகள்