நிலநடுக்கத்திற்கு நன்றி கூறி, தப்பி ஓட்டம் பிடித்த 300 பெண் கைதிகள்
Read Time:1 Minute, 1 Second
சிலியில் 8.3 அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்த்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் பலியாகினர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதற்கிடையே நிலநடுக்கத்தை நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு அங்கு சிறையில் இருந்த 300 பெண் கைதிகள் நிலநடுக்கத்திற்கு நன்றி கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கைதிகள் தப்பி ஓடியதை அந்நாட்டு உள்துறை மந்திரி தெளிபடுத்தியுள்ளார். மேலும், 45 பெண் கைதிகளை போலீசார் விரட்டி பிடித்துவிட்டனர் என்றும் மற்றவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating