அங்கவீன யுவதி மீது பாலியல் வல்லுறவு; தொழிற்சாலை உரிமையாளருக்கு 7 வருட கடூழிய சிறை

Read Time:1 Minute, 40 Second

rape.girl_repeஅங்கவீனமான யுவதி ஊழியர் ஒருவரை சனிக்கிழமை வேலைக்கு வரவழைத்து, பாலியல வல்லுறவில் ஈடுபடுத்திய கைத்தொழிற்சாலை உரிமையாளருக்கு ஏழுவருட கடூழியச்சிறைச் தண்டணை விதிக்கப்பட்டது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இவ்வாறு சிறைத்தண்டனை விதித்தார்.

பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஓர் இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

இதனைச் செலுத்தவில்லையாயின் ஆறுமாத கடூழியச்சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் செலுத்த வேண்டும். இன்றேல் மூன்றுமாத சிறைத்தண்டனை வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் கிரிபத்கொடையில் பட்டிக் தொழிற்சாலை உரிமையாளராவார் அவரின் வயது 54.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட யுவதி செவிப்புலன் அற்ற 34 வயதுடையவர்.

முறைப்பாட்டாளரின் சார்பில் அரச சிரேஷ்ட வழக்கறிஞர் நயோமி விக்கிரமசேகர ஆஜரானார்.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த இவ்வழக்கில் எவ்விதமான சந்தேகமுமின்றி குற்றவாளி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரட்டைத் தலை பாம்பு: இரு வாய்களாலும் உணவு உண்கிறது
Next post வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் ‘நிர்வாண நடனம்’! – தீயாய் பரவும் வீடியோ..