அனந்திக்கு த. தே. கூ கட்டுப்பாடு
Read Time:51 Second
மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு கருத்து வெளியிடக் கூடாது என்று,
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகமொன்று அனந்தி சசிதரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை அவர் உறுதிப்படுத்தினார்.
எனினும் தமக்கு கருத்துக்களை வெளியிடும் உரிமை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
Average Rating