குவைத்தில் கொலைச் சம்பவம்; இலங்கைப் பெண் கைது
Read Time:53 Second
குவைத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹவாலி பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் நேற்று இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அந்த நபரை தற்பாதுகாப்பிற்காக தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் இலங்கைப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எகிப்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Average Rating