நைஜீரிய சிறுமிகளின் விடுதலைக்காக, கன்னித்தன்மையை வழங்கும் பொப்பிசை பாடகி!
நைஜீரியாவில் போகோஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட 276 நைஜீரிய சிறுமிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக தனது கன்னித்தன்மையை வழங்குவதாக அறிவிப்பு செய்து நைஜீரிய பொப்பிசை பாடகியும் சமாதான தூதுவருமான அபோதியி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஏப்பிரல் மாதம் நைஜீரிய வடகிழக்கு நகரான சிபொக்கிலிருந்து கடத்தப்பட்ட பாடசாலை சிறுமிகளை விடுதலை செய்வதற்காகவே அவர் இவ்வாறு தனது கன்னித்தன்மையை வழங்குவதாக அதிரடி அறிவிப்பு செய்துள்ளார்.
நைஜீரிய இமோ மாநிலத்திலிருந்து வான்கார்ட் பத்திரிகைக்கு (23 வயது) அளித்த பேட்டியில் இந்த இரவு 11 மணிப்பொழுதில் நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த சின்ன சிறுமிகளை பற்றி தான் நினைத்து கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது கவலையாக உள்ளது. என்று அவர் கூறினார்.
அதனால், சிறுமிகளின் விடுதலைக்காக தன்னையே போராளிகளுக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Average Rating