பருத்தித்துறையில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல்
Read Time:1 Minute, 5 Second
யாழ். வடமராட்சியின் கற்கோவளம் பகுதியில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த மாணவன் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்கரை வீதியைச் சேர்ந்த ஸ்ரீ மனோகரன் கௌசிகன் (வயது 16) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இவர் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது ஒரு குழுவினர் இடைமறித்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இவருடன் கல்வி கற்கும் சில மாணவர்களும் இணைந்தே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக காயமடைந்த மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Average Rating