மகன் சுட்டுக்கொலை; தந்தை தப்பியோட்டம்..
Read Time:55 Second
கலவான கொஸ்வத்த பகுதியில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தந்தை தப்பிச் சென்றுள்ளார்.
மதுபோதையில் அயலவர்களுடன் சச்சரவில் ஈடுபடும் மகன் தொடர்பில் கோபமுற்ற தந்தை நேற்றிரவு இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 வயதான இளைஞனே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது கலவான மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய 47 வயது தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அவரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Average Rating