நைஜீரியாவில் விபசார விடுதியில், குண்டு வெடித்து 10 பேர் பலி
Read Time:1 Minute, 5 Second
நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகளின் அட்டுழியம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவிகள் கடத்தல் மற்றும் குண்டு வைத்து பொதுமக்களை கொன்று குவிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு நைஜீரியாவில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. அங்குள்ள பாயுசி சிட்டி விபசார விடுதிகள் உள்ளன.
அங்குள்ள விபசார விடுதியில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 10 பேர் பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு போகோஹாரம் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
நைஜீரியாவை இஸ்லாமிய நாடாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating