ஓடும் பஸ்சில் போலீஸ் அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை: வக்கீல் கைது!!

Read Time:3 Minute, 24 Second

35c1b11e-7766-4078-bec4-611e80bc5acd_S_secvpfகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலை தனியார் சொகுசு பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தார்.

நேற்று காலை அந்த பஸ் நாகர்கோவிலை கடந்து குளச்சல் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பார்வதிபுரம் அருகே சென்றபோது திடீரென போலீஸ் அதிகாரியின் மனைவி சத்தம்போட்டு பஸ்சை நிறுத்தும்படி கூறினார். உடனே டிரைவரும் பஸ்சை நிறுத்தினார்.

போலீஸ் அதிகாரியின் பின் சீட்டில் அமர்ந்திருந்த 35 வயது வாலிபர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், தற்போது அவர் எல்லை மீறியதாகவும் கூறி சத்தம் போட்டார். அவரது புகாரை கேட்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசில் உயர் போலீஸ் அதிகாரியின் மனைவி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:–

நான் ஐதராபாத்தில் இருந்து பஸ்சில் புறப்பட்டேன். அந்த வாலிபர் பெங்களூரில் ஏறினார். நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின் சீட்டில் அவர் அமர்ந்தார். பஸ்சில் ஏறிய சிறிது நேரத்தில் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். வழியில் சாப்பிடுவதற்காக பஸ் ஒரு ஓட்டலில் நின்றது. அப்போது நான் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தேன். அந்த வாலிபர் வழியில் நின்று நான் கீழே இறங்க விடாமல் என்னை தொட முயன்றார். பின்னர் பஸ் பார்வதிபுரம் வந்தபோது முக பாவனையால் தொல்லை கொடுத்தார். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளையைச் சேர்ந்த ரீகன் (வயது 35) என்பது தெரியவந்தது. அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் 1–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ரீகன் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை!!
Next post நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை!!