கருர் அருகே ஜஸ் வாங்கி தருவதாக கூறி சிறுமிகளை கடத்திய வெல்டர் கைது!!
கரூர் மக்கள் பாதை கீரைக்கார தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவர் சிமெண்ட் குழாய் உற்பத்தி செய்து வருகிறார். இவரது மகள் அட்சயா(4). இவர்களது எதிர் வீட்டை சேர்ந்த டெய்லர் அய்யப்பன் மகள் கீர்த்தனா(4). தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. படித்து வந்த இந்த 2 சிறுமிகளும் நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது போதையில் அங்கு வந்த இளைஞர் 2 சிறுமிகளையும் அந்த பகுதியில் உள்ள சுங்க கேட் அருகே அழைத்து சென்று ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார். இதற்கிடையே குழந்தையை காணாத பெற்றோர் அந்த பகுதியில் தேடினர். அப்போது குழந்தைகளின் உறவினர் ராஜா என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சுங்க கேட் பகுதிக்கு திரண்டு சென்றுள்ளனர்.
அப்போது அந்த வாலிபர் சிறுமிகளை அமராவதி பழைய பாலம் வழியாக அழைத்து சென்றதை பார்த்த குழந்தைகளின் உறவினர்கள் இளைஞரிடம் இருந்து சிறுமிகளை மீட்டு அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கிருஷ்ணராயபுரம் வட்டம் சின்னதேவன் பட்டியை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் மகன் மோகன்குமார்(33) என்பது தெரியவந்தது.
கோவையில் வெல்டராக வேலை பார்த்து வந்த அவர் நேற்று ஊருக்கு செல்ல கரூர் வந்த போது மது அருந்தி விட்டு போதையில் நடந்தே சென்ற போது சிறுமிகளை அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த கரூர் போலீசார் மேலும் குழந்தைகள் கடத்தும் கும்பலிடம் குழந்தைகளை விற்கும் நோக்கத்தில் அவர் கடத்திச் சென்றாரா?அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கடத்தி சென்றாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating