மனைவி, மாமியாருடன் உல்லாசம்: காண்டிராக்டர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்!!
மேடவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தசரதன் (36). அ.தி.மு.க பிரமுகரான இவர் பிளம்பிங் காண்டிராக்டராக இருந்து வந்தார். இவருக்கு கஸ்தூரி(30) என்ற மனைவியும், சுமன்(10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 16–ம் தேதி தசரதன் படப்பையிலிருந்து வண்டலூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் அவரை வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சத்யசீலன்(25), ஜோஸ்வா(25) ஆகியோர் பொன்னேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவருடன் நடத்திய விசாரணையில் சத்யசீலனின் அக்காவும், கே.கே.நகர் 4வது செக்டர் பகுதியை சேர்ந்த ரங்கராஜின் மனைவியுமான மைதிலி(27) இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. ஓட்டேரி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே சரணடைந்த 2வாலிபர்களையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். சத்யசீலன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:
நானும், கே.கே.நகர் 4வது செக்டர் பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இதில் சண்முகப்பிரியாவின் அம்மா கோட்டீஸ்வரியுடன் தசரதன் (கொலையுண்டவர்) கள்ள தொடர்பு வைத்திருந்தார். இதனை நான் கண்டித்தேன்.
பின்னர் எனது மனைவி மற்றும் அவரது தங்கை அனுப்பிரியாவை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் சென்றேன். ஆனாலும் தசரதன் திருந்தவில்லை. இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றார்.
நாளடைவில் எனது மனைவியுடனும் தசரதன் நெருங்கி பழகி கள்ள தொடர்பு வைத்திருந்தார், மனைவி மற்றும் மாமியாருடன் தசரதன் மாறி, மாறி உல்லாசம் அனுபவித்து வந்ததை நானும், எனது அக்கா மைதிலியும் நேரிடையாக பார்த்தோம். இதனால் தசரதன் மீது கோபம் அதிகமாகி அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். அதன்படி எனது நண்பர்களை வைத்து தசரதனை நோட்டமிட்டு கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொலைக்கு உடந்தையாக இருந்த எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கிரீஷ்(25), ராஜ்குமார்(25) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மேலும் கொலைக்கு பயண்படுத்திய ஒரு கார், இரண்டு பைக்குகள், 4 கத்தி மற்றும் வீச்சரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Average Rating