காஸாவை சீரமைக்க மலாலா நிதியுதவி!!
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 1500–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பல நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மேலும் ஐ.நா.சபை நடத்தும் பல பள்ளிக்கூடங்கள் இடிந்து சேதமடைந்தன.
போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காஸாவை சீரமைக்க சர்வதேச நாடுகள் நிதி உதவிகள் மற்றும் நன்கொடைகள் அளித்து வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் (17). காஸாவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காக போராடியதற்காக அவரை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் உயிர் பிழைத்தார்.
சேவையை பாராட்டி சமீபத்தில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
Average Rating